சினிமா செய்திகள்
சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் மிரட்டலான டீசர்.. வரான் வரான் இந்த வீரத் தமிழன்!


சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ஈஸ்வரன் படத்தின் டீசர் இன்று அதிகாலை, பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகியுள்ளது. இதற்காகச் சிம்பு ரசிகர்கள் அலாரம் வைத்தும், தூங்காமல் விழித்து இருந்தும் டீசரை ட்ரென்டாக்கி வருகின்றனர்.
டீசரில் வரும் வரான் வரான் இந்த வீரத் தமிழன், வரலாற்றைத் திருப்பி எழுதி எழுதும் தலைவன் என்ற பாடல் மாசாகவும், டீசர் ஆரம்பிக்கும் வரும் பீஜியம் மன்மதன் படம் போலவும் உள்ளது. கடவுளைச் சிரிக்க வைக்க என்ன பண்ணனும் தெரியுமா? நம்ம பிளான அவர் கிட்ட சொன்னாலே போதும் விழுந்து விழுந்து சிரிப்பார், அடுத்து என்ன நடக்க போகுதுனு தெரிஞ்சவன் சைலண்ட்டா ஆ தான் இருப்பான் என்ற வசனங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டுகின்றனர். போஸ்டர் டீசர் என இரண்டிலும் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன் என தெரியவில்லை. ஆனால் ஆங்காங்கே நாயகி வரும் காட்சிகள் அழகாக உள்ளன. கதை என்ன என்று யூகிக்க முடியாத அளவிற்கு டீசர் வந்துள்ளது.
ஈஸ்வரன் படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி எடிட்டிங். தமன் இசை அமைத்துள்ளார்.
ஈஸ்வரன் – டீசர்!
சினிமா செய்திகள்
அஜித் வீட்டிலேயே ‘வலிமை’ டப்பிங் பணிகளா?


அஜித் கட்டியிருக்கும் புதிய வீட்டில் டப்பிங் தியேட்டர் உள்பட பல்வேறு வசதிகள் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது அஜித் நடித்து முடித்திருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் டப்பிங் பணியை அவரது வீட்டிலுள்ள டப்பிங் தியேட்டரிலேயே முடிக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது,
ஆனால் அந்த செய்தி தவறானது என்று அஜித் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அஜித் வழக்கம் போல் வெளியில் உள்ள பின் ஸ்டூடியோவில் தான் டப்பிங் செய்வார் என்றும் அவரது வீட்டிலுள்ள டப்பிங் ஸ்டுடியோ இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்றும் கூறப்படுகிறது,
மேலும் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் தயாராகி விட்டதாகவும் அஜித்தின் அனுமதி பெற்று எப்பொழுது வேண்டுமானாலும் அந்த மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி வெளிவரலாம் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது,
சினிமா செய்திகள்
’சூர்யா 40’ படத்தில் ராஜ்கிரண்-சத்யராஜ் கேரக்டர்கள் என்ன? புதிய தகவல்!


சூர்யா நடிக்க இருக்கும் 40வது திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. சூர்யா தற்போது தான் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளதால் ஓய்வுக்குப் பின் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் சத்யராஜ், தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் டி இமான் இந்த படத்தில் இசையமைக்க உள்ளார் என்பதும் ராண்டி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பதும் தெரிந்ததே
சினிமா செய்திகள்
முடிந்தது ‘லுக் டெஸ்ட்’: மார்ச் 15ல் ஆரம்பமாகிறது ‘தளபதி 65’ படப்பிடிப்பு!


தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மார்ச் 15ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் அதாவது ரஷ்யாவில் படமாக்க திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாகவும் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா போட்டியில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து பூஜா ஹெக்டே தான் கிட்டத்தட்ட இந்த படத்தின் நாயகி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.