சினிமா செய்திகள்
மகனை நினைத்து சோகத்தில் விஜய்.. ஏன்?


கொரோனா பாதிப்பால் ஷூட்டிங் ஏதும் இல்லாததால், நடிகர் விஜய் வீட்டில் தான் உள்ளார்.
இவர் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கொரோனா பாதிப்பால், படம் வெளியாக முடியாமல் தள்ளிப்போகிறது. மாஸ்டர் படம் திரையரங்கத்தில் வெளியாகாது. டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், அது வதந்தி என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் படித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் அவரால் இந்தியா திரும்பி வரவில்லை. எனவே தனது மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நடிகர் விஜய் சோகத்தில் உள்ளாராம். இதைப் பிரபல நடிகரும், பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் உறுதி செய்துள்ளார்.
சினிமா செய்திகள்
அமீர் கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கான காரணம் என்ன?


நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். அதில் ஒன்று அமீர் கானுடன் நடிக்க இருந்த லால் சிங் சர்தார் திரைப்படம்.
கொரோனாவுக்கு முன்பே அந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க 20 நாட்கள் தேதிகள் ஒதுக்கி அளித்துள்ளார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அப்போது அது நடைபெறாமல் போனது.
அடுத்து மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, மீண்டும் 20 நாட்கள் கொடுத்துள்ளார். ஆனால் லடாக் எல்லையில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகளை எடுக்க வேண்டி இருந்தது. அங்கு இந்தியா- சீனா எல்லை பிரச்சனை வர மிண்டும் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது.
பின்னல் படப்பிடிப்பை வெளிநாட்டில் எடுக்கத் திட்டமிட்டு அதற்கு 20 நாட்கள் தேதிகள் ஒதுக்கியுள்ளார், ஆனால் அதுவும் புதிய மற்றும் இரண்டாம் கட்ட கொரோனா காரணமாகத் தள்ளிப்போனது.
ஒரு படத்துக்கு எத்தனை முறைதான் தேதிகளை ஒதுக்குவது என்று நினைத்த விஜய் சேதுபதி, லால் சிங் சர்தார் திரைப்படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
சினிமா செய்திகள்
இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு


யோகிபாபுவை வைத்து இயக்குநர் பா.இரஞ்சித் பொம்மை நாயகி என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்.
தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரடொக்ஷன்ஸ்” ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு வெற்றியினைத் தொடர்ந்து “ரைட்டர்” படம் தயாரிப்பில் இருக்கும் நிலையில், தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை, யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது நீலம் புரடொக்ஷன்ஸ்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். ‘பொம்மைநாயகி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியிருக்கிறது.
யோகிபாபுவோடு இணைந்து சுபத்ரா, ஜி,எம் குமார், ஹரி, விஜய் டிவி ஜெயச்சந்திரன். உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்திருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவாளராக அதிசயராஜ், இசையமைப்பாளராக சுந்தரமூர்த்தி, எடிட்டர் செல்வா RK, கலை ஜெயரகு, பாடல்கள் கபிலன், அறிவு ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். யாழிபிலிம்ஸ், வேலவன், லெமுவேல் இணை தயாரிப்பில், பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் பொம்மை நாயகி உருவாகிறது.
சினிமா செய்திகள்
எதிர்பார்ப்புக்கு மாறாக மாஸ்டர் ஒடிடி தளத்தில் மாற்றம்!


மாஸ்டர் திரைப்படம் எதிர்பார்ப்புக்கு மாறாக விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வந்தது. பெரும்பாலான மக்களின் வரவேற்பை இப்படம் பெற்றிருந்தாலும் ஊரடங்கு காரணமாக தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட்த்தையே அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக விஜய் அடுத்த பட கால்ஷீட்டை மீண்டும் லலித் குமாருக்கே கொடுத்திருப்பதாகவும் அதை லோகேஷ் கனகராஜே இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. படக்குழு இதனை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் வழக்கமாக படங்கள் திரைக்கு வந்து குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு பின் ஒடிடி தளத்துக்கு வருவது வாடிக்கை. ஆனால் மாஸ்டர் படத்தை வாங்கியுள்ள அமேசான் பிரைம் நிறுவனம் இதற்காக சிறப்பு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் 15 நாட்களில் படம் ஒடிடியில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் மாஸ்டர் அடுத்த வாரம் அமேசானில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வேலைவாய்ப்பு2 days ago
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு!
-
விமர்சனம்2 days ago
இன்னும் எத்தனை படங்கள் இப்படி?… புலிக்குத்தி பாண்டி விமர்சனம்
-
வேலைவாய்ப்பு2 days ago
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!