வணிகம்
சுந்தர் பிச்சையின் புதிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சுந்தர் பிச்சை, தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள சுந்தர் பிச்சையின் சம்பளத்தில் மாற்றம் அடைந்துள்ளது.
புதிய பதவி உயர்வை அடுத்து சுந்த பிச்சைக்கு 1,707 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும், 2020-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் சம்பளமும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவரது செயல்திறனுக்காக 640 கோடி ரூபாய் மதிப்பிலான போனஸ் பங்குகளும் அளிக்கப்பட உள்ளன. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் இருந்த போது சுந்தர் பிச்சைக்கும் 13.3 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வணிகம்
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை( 22/04/2021)!


இன்று காலை (22/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 26 ரூபாய் அதிகரித்து 4,537 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து 35,600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4896 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1.60 பைசா குறைந்தது, 75.70 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 75,700 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
பர்சனல் பைனான்ஸ்
மகிழ்ச்சி.. இனி ஏடிஎம் மையங்களில் ‘கூகுள் பே, பேடிஎம்’ பயன்படுத்தியும் பணம் எடுக்கலாம்!


நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்த யுபிஐ செயலிகள் மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கலாம் என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே செயலிகள் மூலமாகப் பணம் எடுக்க முடியும்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் நிலையங்களில் பணம் எடுக்கும் முறையை, NCR கார்ப்ரேஷன் அறிமுகம் செய்துள்ளது. இதை “Interoperable Cardless Cash Withdrawal –ICCW”. என்று கூறுகின்றனர்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது எப்படி?
1) யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே என ஏதேனும் ஒரு யுபிஐ செயலி உங்கள் மொபைல் போனில் இருக்க வேண்டும்.
2) அந்த செயலிகள் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
3) யுபிஐ செயலிகளில் உள்ள QR குறியீடு ஸ்கான் செய்யும் முறை மூலமாக, ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்த பிறகு எவ்வளவு பனம் தேவை என்று உள்ளிட வேண்டும்.
4) பணத்தை உள்ளிட்ட பிறகு, 4 அல்லது 6 இலக்க யுபிஐ பின் எண்ணை உள்ளிட்டால், வங்கி கணக்கிலிருந்து பணம் பிடிக்கப்பட்டு, ஏடிஎம் மூலம் பணம் விநியோகிக்கப்படும்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே பணம் எடுக்க முடியும்.
வணிகம்
நகை வாங்க சரியான நேரம் (20/04/2021)!


இன்று காலை (20/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 4,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 35,600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4809 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1.40 பைசா குறைந்தது, 73.60 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 73,600 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!