வணிகம்
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. தினசரி ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு குறைப்பு!


வங்கி ஏடிஎம் மையங்களில் பொதுவாக ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் வரையில் மட்டுமே பணத்தினை எடுக்கப் பெரும்பாலான வங்கிகள் அனுமதிக்கின்றன. ஆனால் எஸ்பிஐ வங்கி ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை பணத்தினை ஏடிஎம் மையங்களில் இருந்து எடுக்க அனுமதி அளித்து வருகிறது.
ஆனால் இதனைக் குறைக்க முடிவு செய்துள்ள எஸ்பிஐ வங்கி வர இருக்கும் அக்டோபர் 31-ம் தேதி முதல் தங்களது வாடிக்கையாளர்களால் தினசரி 20,000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
இதுவே அதிகத் தொகையை ஏடிஎம் மையங்களில் இருந்து எடுக்க அனுமதி வேண்டும் என்றால் அதற்கு டிபிட் கார்டின் திட்டத்தினை மாற்ற வேண்டும். இவ்வாறு டெபிட் கார்டின் திட்டத்தினை மாற்றும் போது ஆண்டுக் கட்டணங்கள் போன்றவை உயரும்.
ஏடிஎம் மையங்களில் அதிகளவில் மோசடிகள் நடைபெறும் நிலையில் பணம் எடுக்கும் வரம்பைக் குறைக்கும் போது மோசடியின் தாக்கம் குறையும் என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனையும் அதிகரிக்கும் என்றும் எஸ்பிஐ வங்கி கூறுகின்றது.
வணிகம்
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை( 22/04/2021)!


இன்று காலை (22/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 26 ரூபாய் அதிகரித்து 4,537 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து 35,600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4896 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1.60 பைசா குறைந்தது, 75.70 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 75,700 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
பர்சனல் பைனான்ஸ்
மகிழ்ச்சி.. இனி ஏடிஎம் மையங்களில் ‘கூகுள் பே, பேடிஎம்’ பயன்படுத்தியும் பணம் எடுக்கலாம்!


நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்த யுபிஐ செயலிகள் மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கலாம் என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே செயலிகள் மூலமாகப் பணம் எடுக்க முடியும்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் நிலையங்களில் பணம் எடுக்கும் முறையை, NCR கார்ப்ரேஷன் அறிமுகம் செய்துள்ளது. இதை “Interoperable Cardless Cash Withdrawal –ICCW”. என்று கூறுகின்றனர்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது எப்படி?
1) யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே என ஏதேனும் ஒரு யுபிஐ செயலி உங்கள் மொபைல் போனில் இருக்க வேண்டும்.
2) அந்த செயலிகள் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
3) யுபிஐ செயலிகளில் உள்ள QR குறியீடு ஸ்கான் செய்யும் முறை மூலமாக, ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்த பிறகு எவ்வளவு பனம் தேவை என்று உள்ளிட வேண்டும்.
4) பணத்தை உள்ளிட்ட பிறகு, 4 அல்லது 6 இலக்க யுபிஐ பின் எண்ணை உள்ளிட்டால், வங்கி கணக்கிலிருந்து பணம் பிடிக்கப்பட்டு, ஏடிஎம் மூலம் பணம் விநியோகிக்கப்படும்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே பணம் எடுக்க முடியும்.
வணிகம்
நகை வாங்க சரியான நேரம் (20/04/2021)!


இன்று காலை (20/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 4,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 35,600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4809 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1.40 பைசா குறைந்தது, 73.60 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 73,600 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
கிரிக்கெட்2 days ago
கடைசி ஓவர் வரை போராடிய மும்பை: டெல்லி அணி த்ரில் வெற்றி!
-
சினிமா செய்திகள்1 day ago
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்: விரைவில் ரிலீஸ்
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/04/2021)