பங்கு சந்தை
எஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு? எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா?


இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமான எஸ்பிஐ, பிப்ரவரி 2-ம் தேதி பங்குச்சந்தையில் தங்களது பங்குகளை வெளியிட உள்ளது.
எஸ்பிஐ கார்ட்ஸ் முதற்கட்டமாக 9000 கோடி மதிப்பிலான பங்குகளை ஐபிஓ மூலமாக விற்க உள்ளது. ஐபிஓ-ல் எஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகளை மார்ச் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை வாங்கலாம்.
பங்குகள் விலை குறைந்தபட்சம் 750 ரூபாய் எனவும், அதிகபட்சம் 755 ரூபாய் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஓ-ல் குறைந்தபட்சம் 19 பங்குகள் ஒரு லாட் என வாங்க முடியும்.
எஸ்பிஐ ஊழியர்களுக்கு 75 ரூபாய் சலுகை அளிக்கப்படும்.
எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தில் எஸ்பிஐ வங்கிக்கு 76 சதவீத பங்குகளும், கார்லைல் குழுமத்திடம் மீதப் பங்குகளும் உள்ளன.
சென்ற நிதியாண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 36 சதவீதமாக உள்ளது. அதே காலகட்டத்தில் லாபம் 78 சதவீதம் அதிகரித்து 1,034.58 கோடி ரூபாயாக உள்ளது.
பங்கு சந்தை
1407 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; ரத்தக்கண்ணீரில் முதலீட்டாளர்கள்!


தொடர்ந்து 6 அமர்வுகளில் புதிய உச்சத்தைப் பதிவு செய்து வந்த மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை 1,407 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்களின் கண்ணில் ரத்தக் கண்ணீரை வரச் செய்துள்ளது. இதில் என்ன முக்கியம் என்றால் அதிகம் சரிந்தது பெருநிறுவனங்கள் பங்குகள்.
இங்கிலாந்தில் உருவெடுத்துள்ள புதிய கொரோனா தொற்று, எப்போதும் இல்லாத அளவிற்கு நிப்டியில் குவிந்துள்ள முதலீடுகள் போன்றவையே பங்குச்சந்தை சரிவுக்கான காரணங்கள் என்று கூறுகின்றன. முழுமையான காரணங்கள் குறித்துப் பார்ப்பதற்கு முன்பாக இன்று பங்குச்சந்தை எவ்வளவு சரிந்துள்ளது என்று விளக்கமாகப் பார்க்கலாம்.
முன்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், 1,406.73 புள்ளிகள் என 3 சதவீதம் சரிந்து 45,533.96 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. மே 4-ம் தேதிக்குப் பிறகு இதுவே பங்குச்சந்தையில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும்.
மும்பை பங்குச்சந்தை போன்றே தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டியும் 432.15 புள்ளிகள் என 3.14 சதவீதம் சரிந்து 13,328.40 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
மும்பை பங்குச்சந்தையின் அனைத்து துறைகளும் சரிந்து சிவப்பாகவே காட்சி அளித்தன. இண்டஸ் இண்ட் வங்கி, மஹிந்தரா & மஹிந்தரா, எஸ்பிஐ, என்டிபிசி, ஐடிசி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பவர் கிரிட் பங்குகள் 6.98 சதவீதம் சரிந்தன.
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருந்த நிறுவனங்களின் முதலீடுகள் மொத்தமாக 6.59 லட்சம் கோடி ரூபாய் சரிந்து 178.79 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
ஐரோப்பிய சந்தைகளிலிருந்த முதலீடுகள் பாதுகாப்பு கருதித் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. எனவே வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது. இங்கிலாந்தில் புதிதாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மெனி, நெதர்லாந்து பெல்ஜியம், ஆஸ்ட்ரியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இங்கிலாந்து விமான சேவையை நிறுத்தியுள்ளன. இந்தியாவும் இந்த அண்டு இறுதி அவரை இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்தைத் துண்டித்துள்ளது.
பங்குச்சந்தை சரிந்ததற்கான காரணங்கள்:
உருமாறிய கொவிட் தொற்று
கோவிட்-19 தொற்று புதிதாக உருமாறியதாக இங்கிலாந்து அறிவித்ததை அடுத்து உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
விமான போக்குவரத்து நிறுவன பங்குகள்
விமான போக்குவரத்து சேவை துண்டிக்கப்படுவதால் இந்திய விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் பங்குகள் 9.5 சதவீதம் சரிந்து 91.90 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. இண்டெர் குளோப் ஏவியேஷன் நிறுவனம் 6.4 சதவீதம் சரிந்து 1,543.90 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை சரிவு
புதிய கோவி தொற்றால் கச்சா எண்ணெய் தேவை குறையும் என்பதால், விலை திங்கட்கிழமை பேரலுக்கு 2 டாலை வரை சரிந்துள்ளது. இந்தியா அதிகளவில் வாங்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 2.06 டாலர் சரிந்துள்ளது. WTI கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.95 டாலர் சரிந்துள்ளது.
சர்வதேச மந்தநிலை
ஆசியாவின் பிற பங்குச்சந்தைகள் இன்று பிலாட்டகவே முடிந்துள்ளனர். அமெரிக்காவின் புதிய பொருளாதார சலுகை அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பும் இதற்கான காரணமாக உள்ளது. ஜப்பான் பங்குச்சந்தை 0.2 சதவீதம் சரிந்துள்ளது.
பங்கு சந்தை
ஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்!


இந்தியாவின் டாப் 10 மதிப்பு வாய்ந்த நிறுவனங்கள் சென்ற வாரம் ஏற்பட்ட சந்தை சரிவில் சிக்கியதில் 3 முக்கிய நிறுவனங்கள் மட்டும் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக டிசிஎஸ் நிறுவனம் மட்டும் 85,330.17-ல் இருந்து 7,19,857.48 ரூபாயாகச் சந்தை மூலதனத்தினை இழந்துள்ளது. டிசிஎஸ், இன்போசிஸ், ஐடிசி நிறுவனங்களின் சந்தை மூலதனமும் சரிந்துள்ளது.
அதே நேரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சந்தை மூலதனம் 48,524.59 கோடி உயர்ந்து 7.12.965.75 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கோடாக் மஹிந்தரா, மாருதி, எஸ்பிஐ, எச்டிஎப்சி வங்கி, எச்டிஎப்சி, இந்துஸ்தான யூனிலீவர் லிமிட்டட் நிறுவன சந்தை மூலதனமும் உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று காலை 9:45 மணியளவில் மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 61.71 புள்ளிகள் என 0.16 சதவீதம் சரிந்து 34,679.59 ரூபாயாகவும், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிப்டி 24.90 புள்ளிகள் என 0.24 சதவீதம் சரிந்து 10,446.10 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.