வணிகம்
ஏர்டெல், வோடஃபோன் ஐடியாவுடன் கூட்டுச் சேர்ந்த ஏர்டெல்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!


இந்தியாவில் உள்ள கார்பேர்ட் நிறுவனங்கள் அதிக நட்டம் அடைந்துள்ளதாக வோடாஃபோன் ஐடியா நிறுவனமும், ஏர்டெல் நிறுவனங்களும் சென்ற வாரம் அறிவித்திருந்தன.
அதனை தொடர்ந்து வோடாஃபோன் இந்தியாவை விட்டு வெளியேற வாய்ப்புகள் உள்ளதாகவும், அரசு முறையான மானியங்களை டெலிகாம் நிறுவனங்களுக்கு வழங்கினால் மட்டுமே தொடர முடியும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று வோடாஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் டிசம்பர் 1-ம் தேதி முதல் தங்களது கட்டணங்களை உயத்த போவதாக அறிவித்திருந்தன,
இவர்கள் அறிவித்த சில மணி நேரங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தங்களது கட்டணங்களை உயர்த்த உள்ளதாகவும், அதனால் இணையதள தரவு வழங்குவதில் எந்த குறைபாடும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
இத்தனை நாட்களாக அதிக கட்டணங்களை வசூலித்த வந்த ஏர்டெல், வோடாஃபோன் நிறுவனங்களுக்கு சவாலாக ஜியோ டெலிகாம் சேவை வழங்கி வருகிறது. எனவே நாங்கள் ஜியோவை தான் ஆதரிப்போம் என்று வாடிக்கையாளர்கள் கூறிவந்தனர்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு பிற நெட்வொர்க்குகளுக்கு ஜியோ வாடிக்கையாளர்கள் அழைத்தால் 6 பைசா நிமிடத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது. மேலும் தற்போது விரைவில் வோடாஃபோன் ஐடியா, ஏர்டெல் போன்று ஜியோ கட்டணங்களை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
வணிகம்
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை( 22/04/2021)!


இன்று காலை (22/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 26 ரூபாய் அதிகரித்து 4,537 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து 35,600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4896 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1.60 பைசா குறைந்தது, 75.70 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 75,700 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
பர்சனல் பைனான்ஸ்
மகிழ்ச்சி.. இனி ஏடிஎம் மையங்களில் ‘கூகுள் பே, பேடிஎம்’ பயன்படுத்தியும் பணம் எடுக்கலாம்!


நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்த யுபிஐ செயலிகள் மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கலாம் என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே செயலிகள் மூலமாகப் பணம் எடுக்க முடியும்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் நிலையங்களில் பணம் எடுக்கும் முறையை, NCR கார்ப்ரேஷன் அறிமுகம் செய்துள்ளது. இதை “Interoperable Cardless Cash Withdrawal –ICCW”. என்று கூறுகின்றனர்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது எப்படி?
1) யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே என ஏதேனும் ஒரு யுபிஐ செயலி உங்கள் மொபைல் போனில் இருக்க வேண்டும்.
2) அந்த செயலிகள் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
3) யுபிஐ செயலிகளில் உள்ள QR குறியீடு ஸ்கான் செய்யும் முறை மூலமாக, ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்த பிறகு எவ்வளவு பனம் தேவை என்று உள்ளிட வேண்டும்.
4) பணத்தை உள்ளிட்ட பிறகு, 4 அல்லது 6 இலக்க யுபிஐ பின் எண்ணை உள்ளிட்டால், வங்கி கணக்கிலிருந்து பணம் பிடிக்கப்பட்டு, ஏடிஎம் மூலம் பணம் விநியோகிக்கப்படும்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே பணம் எடுக்க முடியும்.
வணிகம்
நகை வாங்க சரியான நேரம் (20/04/2021)!


இன்று காலை (20/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 4,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 35,600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4809 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1.40 பைசா குறைந்தது, 73.60 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 73,600 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
-
தமிழ்நாடு2 days ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)
-
வணிகம்1 day ago
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை( 22/04/2021)!
-
கிரிக்கெட்2 days ago
220 ரன்கள் அடித்தும் டென்ஷனான மேட்ச்: சிஎஸ்கே த்ரில் வெற்றி!