பர்சனல் பைனான்ஸ்
அவசர பணத் தேவையா? வேகமாகக் கடன் பெற 6 வழிகள்!


திடீர் பணத் தேவை என்பது யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். எனவே ஒவ்வொருவரும் குறைந்தது தங்களது 6 மாத சம்பளத்துக்கு இணையான தொகையைச் சேமிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் இது பலரும் செய்வதில்லை. இப்படி சேமிப்பு இல்லாத போது, அவசரக் காலத்தில் மருத்துவம் அல்லது பிற செலவுகளுக்குப் பணம் வேண்டும் என்றால் கடன் பெறுவது என்பது முக்கியமான ஒன்று. எனவே அவசரக் காலத்தில் வேகமாகக் கடன் அளிக்கும் திட்டங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பிக்சட் டெபாசிட் எதிரான கடன்
பிக்சட் டெபாசிட்டில் சேமித்து வந்தால், அதில் உள்ள தொகையில் 90 முதல் 95 சதவீத தொகையைக் கடனாகப் பெற முடியும். வங்கிகள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்துடன் 2 சதவீதம் கூடுதலாக வட்டியை வசூலிக்கின்றன.
தங்க நகைக் கடன்
தனிநபர் கடன் திட்டங்களுடன் ஒப்பிடும் போது வீட்டில் தங்க இருந்தால், சில மணி நேரங்களில் வங்கிகளில் கடன் பெற முடியும். தனிநபர் கடனை விட வட்டி விகிதமும் குறைவு. எனவே தன் இந்தியாவின் தென் மாநிலங்களில் தங்கம் வாங்குவதை ஒரு சேமிப்பாக் கருதுகின்றனர்.
பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு எதிரான கடன் திட்டங்கள்
பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வந்தால், அதில் உள்ள தொகையில் 50 சதவீதம் வரை கடனாக சில நிறுவனங்கள் அளிக்கின்றன. தனிநபர் கடனுக்கு இணையான வட்டி விகிதம் வசூலிக்கப்படும்.
முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன்கள்
அவசர காலத்தில் அதிக கடன் பெறும் ஒரு திட்டமாக முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் திட்டம் உள்ளது. சம்பள வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கான கடன் திட்டமாக இது உள்ளது.
கிரெடிட் கார்டு எதிரான கடன் திட்டங்கள்
சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள், சரியாக கிரெடிட் கார்டு கடனை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டண்ட் கடனை வழங்குகின்றன. ஆனால் இந்த திட்டத்துக்குத் தனிநபர் கடன் திட்டத்தை விட கூடுதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு வரம்பிற்குள் கடன் பெறும் போது கூடுதலாக ஜிஎஸ்டி 18 சதவீதமும் செலுத்த வேண்டி வரும்.
இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிரான கடன்
எண்டொவ்மெண்ட் இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுத்து இருந்தால், 3 அல்லது 5 வருடங்கள் தொடர்ந்து ப்ரீமியம் தொகையைச் செலுத்திய பிறகு, அதில் உள்ள தொகையில் 80 முதல் 90 சதவீதம் வரை கடனாகப் பெறலாம். தங்க நகைக் கடனுக்கு நிகரான வட்டி விகிதம் வசூலிக்கப்படும்.
பர்சனல் பைனான்ஸ்
புதிய வேலை கிடைத்துவிட்டதா? Notice period முடிவதற்குள் அங்கு செல்ல வேண்டுமா? இதோ உங்களுக்கு அதிர்ச்சி செய்தி!


ஒரு நிறுவனத்தில் பணிபுரியப் பிடிக்காமல் வேறு வேலைக்குச் செல்ல ராஜிமா செய்தால் notice period-ல் சில காலம் வேலை செய்ய வேண்டி வரும் அது ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரை இருக்கும். அது வேலை செய்யும் நிறுவனம் மற்றும் பணியில் இருக்கும் பொறுப்புகளைப் பொருத்து மாறும்.
இதில் என்ன அதிர்ச்சி செய்தால், இப்படி notice period-ஐ முடிக்காமல் முன்பு எல்லாம் வேறு பணிக்கு ஈசியா சென்றுவிடுவார்கள். ஆனால் இனி வரும் காலங்களில் notice period-ஐ முடிக்காமல் வேறு வேலைக்குச் செல்லும் போது செலுத்த வேண்டிய தொகைக்கு, 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்துச் செலுத்த வேண்டும்.
குஜராத் அத்தாரிட்டி ஆப் அட்வான்ஸ் ரூலிங் படி, notice period-ஐ முடிக்காமல் வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், அதற்காகப் பிடிக்கப்படும் பணத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இது ஊழியர்களின் சம்பள நிலுவைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
எனவே வேறு வேலை கிடைத்துவிட்டது என்ற காரணத்துக்காக notice period-ஐ முடிக்காமல் செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு இது அதிர்ச்சி அடையும் செய்தியாக அமைந்துள்ளது.
பர்சனல் பைனான்ஸ்
பங்குச்சந்தைக்கு மீண்டும் வரும் ஒரு ‘இந்தியன் ரயில்வேஸ்’ நிறுவனம்!


ஐஆர்சிடிசி தொடர்ந்து மீண்டும் ஒரு இந்தியன் ரயில்வே நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு வருகிறது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் நிறுவனம், ஐபிஓ மூலம் அடுத்த வாரம் பங்குகளை வெளியிடுகிறது. எனவே இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ வெளியீட்டுத் தேதி
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் பங்குகள் ஐபிஓ மூலம் ஜனவரி 18-ம் தேதி திங்கட்கிழமை வெளியிடப்படுகிறது. ஜனவரி 18 முதல் 20-ம் தேதி வரை இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் பங்குகளை பொது வெளியீட்டுக்கு முன்பு வாங்கலாம்.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பங்கின் விலை எவ்வளவு?
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பங்கின் விலை 25 முதல் 26 ரூபாய் வரையில் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓவில் எவ்வளவு பங்குகளை வாங்க வேண்டும்?
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓவில் குறைந்தது 575 பங்குகள் ஒரு லாட் என மட்டுமே வாங்க முடியும். மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை என இரண்டிலுமே பங்குகள் பட்டியலிடப்படும். அதிகபட்சம் 13 லாட் வரை வாங்க முடியும்.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ – பலங்கள்
1) இந்திய ரயில்வே வளர்ச்சி திட்டமிடலில் முக்கிய பங்கு
2) சிறந்த கடன் மதிப்பீடு(AAA)
3) கடன் செலவு
4) வலுவான நிதி செயல்திறன்
5) சிறந்த சொத்து-பொறுப்பு மேலாண்மை
6) அனுபவம் வாய்ந்த நிர்வாக குழு
எவ்வளவு நிதி
ஐபிஓ மூலம் 4600 கோடி ரூபாய் நிதியை இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் திரட்ட உள்ளது.
பர்சனல் பைனான்ஸ்
‘சவரன் தங்கப் பத்திரம்’ திட்டம் மூலம் நாளை முதல் தங்கம் விற்பனை.. முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்!


சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தின் 2020-2021 நிதியாண்டுக்கான 10வது வெளியீடு ஜனவரி 11-ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது. இதன் கீழ் ஜனவரி 15-ம் தேதி வரை தங்கத்தை பத்திரமாக வாங்கலாம்.
சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தில் 1 கிராம் தங்கத்தை, 5104 ரூபாய்க்கு வாங்க முடியும். 15-ம் தேதிக்குள் பணத்தை செலுத்தினால் ஜனவரி 19-ம் தேதி முதல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தங்க நகைகளை போன்றே இந்த தங்கம் பத்திரத்தையும் அடகு வைத்து கடன் பெற முடியும். சுத்த தங்கத்தின் விலையில் தான் சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இரண்டும் சேர்ந்து சவரன் தங்கம் பத்திரத்தை வெளியிடுகின்றன.
சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தின் கீழ் தங்கம் வாங்கும் போது கிராம் 1-க்கு 50 ரூபாய் சலுகை வழங்கப்படும். எனவே குறைந்தது 5,054 ரூபாய்க்கு 1 கிராம் சுத்த தங்கத்துக்கு நிகரான தங்கத்தைப் பத்திரம் வழியாக வாங்கலாம்.
டிசம்பர் 28-ம் தேதி 1 கிராம் சவரன் தங்கம் 5000 ரூபாய் என்ற சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தின் கீழ் விற்கப்பட்டது.
முக்கியமாகத் தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்தால் 8 வருடங்களில் முதிர்வடையும். ஒவ்வொரு ஆண்டுக்கு 2.50 சதவீதம் வட்டி தொகை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
வங்கிகள், பங்குச்சந்தை, அஞ்சல் அலுவலகம் வழியாக எல்லாம் சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்த பிறகு இடையில் வெளியேற வேண்டும் என்றாலும், அன்றைய தேதியின் விலைக்கு விற்றுவிட்டு பணத்தைப் பெற முடியும்.
தங்கம் நகைகளை வாங்குவதால் இந்தியாவுக்கு ஏற்படும் இறக்குமதி செலவுகளைக் குறைப்பதற்காக, சவரன் தங்கப் பத்திரம் திட்டம் நவம்பர் 2015-ம் ஆண்டு பிரதமர் மோடியில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.