வணிகம்
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பேடிஎம் என்ன காரணம்!


டிஜிட்டல் வாலெட் நிறுவனமான பேடிஎம் வெள்ளிக்கிழமை திடீரென கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது பயனர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
அண்மையில் கூகுள் நிறுவனம் தங்கள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிகளை விதித்தது. அதன் படி பெட்டிங் போன்ற ஆனலைன் கேம்கள் செயலிகளை இனி பிளே ஸ்டோரில் தொடர்ந்து வழங்க முடியாது என்று கூறப்பட்டு இருந்தது.
பேடிஎம் செயலி வாலெட் சேவை தானே நமது பிரதான வணிகம் என்று கேம் விதிகளை பொருட்படுத்தாமல் இருந்துவந்தது. பேடிஎம் செயலியின் கேம் சேவை கீழ் சென்று பெட்டிங் போன்ற கேம்களை விளையாட முடியும்.
இதை அறிந்த கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலியை அதிரடியாக நீக்கியுள்ளது. இது பேடிஎம் நிறுவனத்தின் பயனர்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேடிஎம் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தூக்கப்பட்டு இருந்தாலும், அதன் பிற வணீகம் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு செயலிகள் தொடர்ந்து கிடைக்கும். பேடிஎம் செயலியை தொடர்ந்து பயன்படுத்தவும் முடியும். வாலெட்டில் உள்ள பணம் பாதுகப்பாகவும் இருக்கும்.
மறுபக்கம் பேடிஎம் நிறுவனத்தில் அதிகப்படியான சீன முதலீடுகள் இருப்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
வணிகம்
உஷார்.. நாளை முதல் 4 நாட்களுக்கு இந்த நகரங்களில் எல்லாம் வங்கிகள் விடுமுறை!


ஏப்ரல் 13 முதல் 16-ம் தேதி வரையில் பல்வேறு நகரங்களில் வங்கிகள் விடுமுறையில் இருக்கும் என்று ஆர்பிஐ காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் விழாக்கள் கொண்டாடப்படும் நகரங்களைப் பொருத்து மாறும்.
ஏப்ரல் 13-ம் தேதி எந்த நகரங்களில் எல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை?
குடி படுவா / தெலுங்கு புத்தாண்டு தினம் / உகாதி விழா / சஜிபு நோங்மபன்பா (சீராபா) / முதல் நவராத்திரி / பைசாக்கி போன்ற விழாக்கள் காரணமாக பெலாப்பூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் ஏப்ரல் 13-ம் தேதி விடுமுறையில் இருக்கும்.
ஏப்ரல் 14-ம் தேதி எந்த நகரங்களில் எல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை?
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / தமிழ் புத்தாண்டு தினம் / விஷு / பிஜூ விழா / செயிரோபா / போஹாக் பிஹு போன்ற விழாக்களுக்காக, அகர்தலா, அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டெஹ்ராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, டெல்லி, நாக்பூர், நாக்பூர் , திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் ஏப்ரல் 14-ம் தேதி விடுமுறையில் இருக்கும்.
ஏப்ரல் 15-ம் தேதி எந்த நகரங்களில் எல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை?
இமாச்சல தினம் / பெங்காலி புத்தாண்டு தினம் / போஹாக் பிஹு / சர்ஹுல் போன்ற விழாக்களுக்காக, அகர்தலா, குவஹாத்தி, கொல்கத்தா, ராஞ்சி மற்றும் சிம்லா உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் ஏப்ரல் 15-ம் தேதி விடுமுறையில் இருக்கும்.
ஏப்ரல் 16-ம் தேதி எந்த நகரங்களில் எல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை?
போஹாக் பிஹு விழா காரணமாக குவஹாத்தியில் ஏப்ரல் 16-ம் தேதி வங்கிகள் விடுமுறையில் இருக்கும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வங்கி விடுமுறை நாட்கள், மாநிலங்கள் மற்றும் நகரங்களைப் பொருத்து மாறும்.
வணிகம்
டிசிஎஸ் நிகர லாபம் 14.8% அதிகரிப்பு.. வருவாய் 43,705 கோடியாக அதிகரிப்பு!


டிசிஎஸ் நிகர லாபம் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிகர லாபம் 4-ம் காலாண்டில் 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. வருவாய் 43,705 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்ற நிதியாண்டின் 3-ம் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 42,015 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4-ம் காலாண்டில் 43,705 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே கால கட்டத்தில் நிகர லாபம் 8,701 கோடி ரூபாயிலிருந்து 9,246 கோடி ரூபாயாக உயர்ந்தது. வரிக்கு முந்தைய வருவாய் 11,184 கோடி ரூபாயிலிருந்து 11,734 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
4-ம் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 19,388 நபர்களை பணிக்கு எடுத்துள்ளது. சென்ற நிதியாண்டில் மொத்தமாக 40,100 பேரை பணிக்கு எடுத்துள்ளது. சென்ற காலாண்டில் 7.2 சதவீத ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
துறை சார்ந்த வளர்ச்சி
வங்கி மற்றும் நிதி (5.4%), உற்பத்தி (4.6%), ரீடெயில் (3.5%), தொலைத்தொடர்பு மற்றும் மீடியா (0.9%), பிற துறைகள் (3.9%)
டிசிஎஸ் பங்குகள்
இன்றைய சந்தை நேர முடிவில், டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 2.43 சதவீதம் என 80.75 புள்ளிகள் சரிந்து, 3,241.45 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. டிசிஎஸ் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களுக்குப் பங்குக்கு 15 ரூபாய் டிவிடண்ட் வழங்கப்பட்டுள்ளது.
வணிகம்
முக்கிய அறிவிப்பு.. 14 மணி நேரத்துக்கு RTGS சேவை வேலை செய்யாது!


RTGS (Real Time Gross Settlement) ஆன்லைன் பரிவர்த்தனை 14 மணி நேரத்துக்கு வேலை செய்யாது என்ற முக்கிய அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.
RTGS என்பது ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு, “நிகழ் நேரத்தில்” பணத்தை இடமாற்றம் செய்யும் முறை. குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் RTGS மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.
காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெற்று வந்த RTGS பணம் பரிவத்தனை சேவை, 2019 ஆகஸ்ட் முதல் 24 மணி நேரமும் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 18-ம் தேதி RTGS பணம் பரிவர்த்தனை சேவைக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. 00:00 மணி முதல் மதியம் 14:00 வரை RTGS சேவை செயல்படாது. அதாவது ஏப்ரல் 17 நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 18-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி வரை RTGS பணம் பரிவர்த்தனை சேவை செயல்படாது.
NEFT பணம் பரிவர்த்தனை சேவையில் எப்போதும் போல இயங்கும்.
-
தமிழ்நாடு1 day ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?