வணிகம்
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்றாலும் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு மானியம் தொடரும்!


பாரத் பெட்ரோலியம் நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு அண்மையில் எடுத்தது.
அதை தொடர்ந்து, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் கேஸ் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மானியம் தொடர்ந்து கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
அதுகுறித்து விளக்கம் அளித்த பெட்ரோலியம் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டாலும், கேஸ் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அரசு நிறுவனங்களில் உள்ள தங்களது முதலீடுகளைக் குறைத்து, தனியாருக்கு விற்று வரும் மத்திய அரசின் முயற்சியில் பாரத் பெட்ரோலியம் பங்குகள் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் 28.50 கோடி கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 7.30 கோடி கேஸ் இணைப்புகள் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
வணிகம்
பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் 2021-2022!


2021-2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தின் முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கும். பிப்ரவரி 15-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டம் நடைபெறும்.
ஜனவரி 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்கி வைப்பார்.
பட்ஜெட் கூடத்தின் இரண்டாம் கட்டம் மார்ச்-8 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
பர்சனல் பைனான்ஸ்
புதிய வேலை கிடைத்துவிட்டதா? Notice period முடிவதற்குள் அங்கு செல்ல வேண்டுமா? இதோ உங்களுக்கு அதிர்ச்சி செய்தி!


ஒரு நிறுவனத்தில் பணிபுரியப் பிடிக்காமல் வேறு வேலைக்குச் செல்ல ராஜிமா செய்தால் notice period-ல் சில காலம் வேலை செய்ய வேண்டி வரும் அது ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரை இருக்கும். அது வேலை செய்யும் நிறுவனம் மற்றும் பணியில் இருக்கும் பொறுப்புகளைப் பொருத்து மாறும்.
இதில் என்ன அதிர்ச்சி செய்தால், இப்படி notice period-ஐ முடிக்காமல் முன்பு எல்லாம் வேறு பணிக்கு ஈசியா சென்றுவிடுவார்கள். ஆனால் இனி வரும் காலங்களில் notice period-ஐ முடிக்காமல் வேறு வேலைக்குச் செல்லும் போது செலுத்த வேண்டிய தொகைக்கு, 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்துச் செலுத்த வேண்டும்.
குஜராத் அத்தாரிட்டி ஆப் அட்வான்ஸ் ரூலிங் படி, notice period-ஐ முடிக்காமல் வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், அதற்காகப் பிடிக்கப்படும் பணத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இது ஊழியர்களின் சம்பள நிலுவைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
எனவே வேறு வேலை கிடைத்துவிட்டது என்ற காரணத்துக்காக notice period-ஐ முடிக்காமல் செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு இது அதிர்ச்சி அடையும் செய்தியாக அமைந்துள்ளது.
பர்சனல் பைனான்ஸ்
பங்குச்சந்தைக்கு மீண்டும் வரும் ஒரு ‘இந்தியன் ரயில்வேஸ்’ நிறுவனம்!


ஐஆர்சிடிசி தொடர்ந்து மீண்டும் ஒரு இந்தியன் ரயில்வே நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு வருகிறது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் நிறுவனம், ஐபிஓ மூலம் அடுத்த வாரம் பங்குகளை வெளியிடுகிறது. எனவே இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ வெளியீட்டுத் தேதி
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் பங்குகள் ஐபிஓ மூலம் ஜனவரி 18-ம் தேதி திங்கட்கிழமை வெளியிடப்படுகிறது. ஜனவரி 18 முதல் 20-ம் தேதி வரை இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் பங்குகளை பொது வெளியீட்டுக்கு முன்பு வாங்கலாம்.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பங்கின் விலை எவ்வளவு?
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பங்கின் விலை 25 முதல் 26 ரூபாய் வரையில் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓவில் எவ்வளவு பங்குகளை வாங்க வேண்டும்?
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓவில் குறைந்தது 575 பங்குகள் ஒரு லாட் என மட்டுமே வாங்க முடியும். மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை என இரண்டிலுமே பங்குகள் பட்டியலிடப்படும். அதிகபட்சம் 13 லாட் வரை வாங்க முடியும்.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ – பலங்கள்
1) இந்திய ரயில்வே வளர்ச்சி திட்டமிடலில் முக்கிய பங்கு
2) சிறந்த கடன் மதிப்பீடு(AAA)
3) கடன் செலவு
4) வலுவான நிதி செயல்திறன்
5) சிறந்த சொத்து-பொறுப்பு மேலாண்மை
6) அனுபவம் வாய்ந்த நிர்வாக குழு
எவ்வளவு நிதி
ஐபிஓ மூலம் 4600 கோடி ரூபாய் நிதியை இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் திரட்ட உள்ளது.
-
கிரிக்கெட்2 days ago
ஒரே நேரத்தில் 2 நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடிய இங்கிலாந்து!
-
பர்சனல் பைனான்ஸ்2 days ago
பங்குச்சந்தைக்கு மீண்டும் வரும் ஒரு ‘இந்தியன் ரயில்வேஸ்’ நிறுவனம்!
-
சினிமா செய்திகள்2 days ago
சீமானை சீண்டுகிறதா விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’?- நேரில் சென்று விளக்கிய நடிகர் பார்த்திபன்
-
சினிமா செய்திகள்2 days ago
எல்லா பிரச்சனைகளும் முடிந்தன.. திரை அரங்குகளில் வெளியானது ஈஸ்வரன்!