வணிகம்
ருச்சி சோயா நிறுவனத்தின் போர்டு இயக்குநராகும் பாபா ராம்தேவ்!


ருச்சி சோயா நிறுவனத்தின் போர்டு இயக்குநர் பதவி பாபா ராம்தேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
பதஞ்சலி என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் பெயர் பாபா ராம்தேவ். ஆனால் பாபா ராம்தேவுக்கு பதஞ்சலி நிறுவனத்தில் 2 சதவீத பங்குகள் கூட கிடையாது.
பாபா ராம்தேவின் நண்பரும், பதஞ்சலி நிறுவனத்தின் தலைவரும் ஆச்சர்யா பாலகிருஷ்ணா பெயரில் தான் 98.6 சதவீத பங்குகள் உள்ளன.
எப்எம்சிஜி துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் பதஞ்சலி நிறுவனம், திவாலாகும் நிலையிலிருந்து ருச்சி சோயா நிறுவனத்தை 4,350 கோடி ரூபாய் கொடுத்து சென்ற ஆண்டு வாங்கியது.
தற்போது ருச்சி சோயாவின் முழுமையான பரிமாற்றங்களும் முடிவடைந்த நிலையில், சுச்சி சோயாவின் நிர்வாக இயக்குநர் பதவி பாபா ராம்தேவின் அண்ணன் ராம் பாரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் முறையாகப் பதஞ்சலி நிறுவனத்துக்குச் சொந்தமான ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவிற்கும் போர்டு இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ரூச்சி சோயா நிறுவனம் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.
வணிகம்
பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் 2021-2022!


2021-2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தின் முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கும். பிப்ரவரி 15-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டம் நடைபெறும்.
ஜனவரி 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்கி வைப்பார்.
பட்ஜெட் கூடத்தின் இரண்டாம் கட்டம் மார்ச்-8 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
பர்சனல் பைனான்ஸ்
புதிய வேலை கிடைத்துவிட்டதா? Notice period முடிவதற்குள் அங்கு செல்ல வேண்டுமா? இதோ உங்களுக்கு அதிர்ச்சி செய்தி!


ஒரு நிறுவனத்தில் பணிபுரியப் பிடிக்காமல் வேறு வேலைக்குச் செல்ல ராஜிமா செய்தால் notice period-ல் சில காலம் வேலை செய்ய வேண்டி வரும் அது ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரை இருக்கும். அது வேலை செய்யும் நிறுவனம் மற்றும் பணியில் இருக்கும் பொறுப்புகளைப் பொருத்து மாறும்.
இதில் என்ன அதிர்ச்சி செய்தால், இப்படி notice period-ஐ முடிக்காமல் முன்பு எல்லாம் வேறு பணிக்கு ஈசியா சென்றுவிடுவார்கள். ஆனால் இனி வரும் காலங்களில் notice period-ஐ முடிக்காமல் வேறு வேலைக்குச் செல்லும் போது செலுத்த வேண்டிய தொகைக்கு, 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்துச் செலுத்த வேண்டும்.
குஜராத் அத்தாரிட்டி ஆப் அட்வான்ஸ் ரூலிங் படி, notice period-ஐ முடிக்காமல் வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், அதற்காகப் பிடிக்கப்படும் பணத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இது ஊழியர்களின் சம்பள நிலுவைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
எனவே வேறு வேலை கிடைத்துவிட்டது என்ற காரணத்துக்காக notice period-ஐ முடிக்காமல் செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு இது அதிர்ச்சி அடையும் செய்தியாக அமைந்துள்ளது.
பர்சனல் பைனான்ஸ்
பங்குச்சந்தைக்கு மீண்டும் வரும் ஒரு ‘இந்தியன் ரயில்வேஸ்’ நிறுவனம்!


ஐஆர்சிடிசி தொடர்ந்து மீண்டும் ஒரு இந்தியன் ரயில்வே நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு வருகிறது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் நிறுவனம், ஐபிஓ மூலம் அடுத்த வாரம் பங்குகளை வெளியிடுகிறது. எனவே இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ வெளியீட்டுத் தேதி
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் பங்குகள் ஐபிஓ மூலம் ஜனவரி 18-ம் தேதி திங்கட்கிழமை வெளியிடப்படுகிறது. ஜனவரி 18 முதல் 20-ம் தேதி வரை இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் பங்குகளை பொது வெளியீட்டுக்கு முன்பு வாங்கலாம்.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பங்கின் விலை எவ்வளவு?
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பங்கின் விலை 25 முதல் 26 ரூபாய் வரையில் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓவில் எவ்வளவு பங்குகளை வாங்க வேண்டும்?
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓவில் குறைந்தது 575 பங்குகள் ஒரு லாட் என மட்டுமே வாங்க முடியும். மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை என இரண்டிலுமே பங்குகள் பட்டியலிடப்படும். அதிகபட்சம் 13 லாட் வரை வாங்க முடியும்.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ – பலங்கள்
1) இந்திய ரயில்வே வளர்ச்சி திட்டமிடலில் முக்கிய பங்கு
2) சிறந்த கடன் மதிப்பீடு(AAA)
3) கடன் செலவு
4) வலுவான நிதி செயல்திறன்
5) சிறந்த சொத்து-பொறுப்பு மேலாண்மை
6) அனுபவம் வாய்ந்த நிர்வாக குழு
எவ்வளவு நிதி
ஐபிஓ மூலம் 4600 கோடி ரூபாய் நிதியை இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் திரட்ட உள்ளது.