வணிகம்
2021 ஆம் ஆண்டு இந்தியாவில் சம்பள உயர்வு மந்தமாக இருக்கும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்


சென்னை: இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு சம்பள உயர்வு சராசரியாக 6.4% சதவிகிதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் மிக குறைந்த அளவிலான கணிப்பு இதுவாகும். இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் உண்மையில் அதிகரித்த 5.9% விட சற்றே அதிகமாகும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் சம்பள உயர்வின் அடிப்படையில் ஆசியா-பசுபிக் சந்தையில் இந்தியா முதல் இரண்டு இடத்திற்குள் வந்துள்ளது. இந்தோனேசியாவில் சம்பள உயர்வு 6.5%, சீனா 6%, பிலிப்பைன்ஸ் 5%, சிங்கப்பூர் 3.5% மற்றும் ஹாங்காங் 3% என கணிக்கப்பட்டுள்ளதாக வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் கூறியுள்ளது.
கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் 9.8% உயர்வு இருக்கும் என்று நிறுவனம் கணித்திருந்தது, ஆனால் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பெறப்பட்ட 18,000 பதில்களின் பகுப்பாய்வு 2021 சம்பள உயர்வுக்கு ஒரு நிதானமான ஆண்டாக இருக்கும் என்று கூறுகிறது.
முந்தைய ஆண்டுகளில் பணவீக்கத்திற்கு அப்பால் நிறுவனங்கள் வழங்கிய சில பிரீமியம் இருந்தபோதும், சம்பள உயர்வு பொருளாதாரத்தில் பணவீக்கக் கூறுகளை ஈடுசெய்யும் என்று எங்கள் ஆய்வு முடிவு காட்டுகிறது என்று வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் ஆலோசனைத் தலைவர் ராஜுல் மாத்தூர் கூறினார்
இருப்பினும் வணிகங்களிடையேயான நம்பிக்கை திரும்பி வருவதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த சர்வேயில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்களில் 37% நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களுக்கு நேர்மறையான வருவாயைக் கணித்துள்ளனர், இது 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 18% என்கிற அளவில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வினால் இந்த வருடங்களில் நிறுவனங்களின் வரவுசெலவுத்திட்டங்கள் இறுக்கமாக இருப்பதால், நிறுவனங்கள் செயல்திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். பட்ஜெட்டில் ஐந்தில் ஒரு பங்கு சிறந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சராசரி ஊழியருக்கு 1 ருபாய் என்கிற அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டால், சிறந்த ஊழியருக்கு 2.35 ருபாய் என்கிற அளவில் ஒதுக்கப்படுகிறது. அதே நேரம் சராசரிக்கு மேல் உள்ள ஊழியருக்கு 1.25 ருபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு வரவுசெலவுத் திட்டத்தின் பெரும்பகுதி சிறந்த ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும் என்று நிறுவனங்கள் கூறுகின்றன, மேலும் இந்த ஆண்டில் முதல் முறையாக வித்தியாசமான மற்றும் உயர் திறமைகளை பாதுகாப்பதற்காக அதிக ஒதுக்கீடு செய்யப்படுவதையும் நாங்கள் காண்கிறோம் என்று மாத்தூர் கூறினார்.
கொரோனா காலகட்டத்தில் வெவ்வேறு துறைகள் வித்தியாசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு தொழில்களின் சம்பள உயர்வு திட்டங்களில் பெரிய இடைவெளிகள் உள்ளன. உயர் தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் சில்லறை துறைகளில் சராசரி சம்பள உயர்வாக 8% ஆக இருந்தாலும், எரிசக்தித் துறை மிக குறைந்த அளவாக 4.6% உயர்வை காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் உயர் நிர்வாகத்திற்கான சம்பள உயர்வு 2020 உடன் ஒப்பிடும்போது பெரிய அளவில் மாற்றம் இருக்காது. கடந்தாண்டு 7.1% அளவில் இருந்த நிலையில் 2021ல் 7% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நடுத்தர நிர்வாகத்திலும் சரிவு கொஞ்சம் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 2020 ல் 7.5% உடன் ஒப்பிடும் போது 2021ல் 7.3% உயர்வு இருக்கும்.
உற்பத்தி மற்றும் கையேடு தொழிலாளர் குழுவில் உள்ள ஊழியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 7.7% சம்பள உயர்வு இருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு 7.2% உயர்வு மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வணிகம்
பெட்ரோல் மீதான வரியை குறைத்த மேற்கு வங்கம்.. தமிழக அரசும் செய்யுமா?


பெட்ரோல் விலை சில மாநிலங்களில் 100 ரூபாயைக் கடந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 1 ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளது.
இந்த வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் பெரும் அளவில் பயன் பெறுவார்கள். பெட்ரோல் மீதான வரியில் மத்திய அரசுக்கு 32.90 ரூபாயும், மாநில அரசுக்கு 18.46 ரூபாயும் வரி வருவாயாகக் கிடைக்கிறது என்று மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, விரைவில் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு வரலாம் என்று எதிர்பார்க்கலாம்.
ஒருவேலைத் தமிழக அரசு இந்த வரி குறைப்பை அறிவித்தால், கண்டிப்பாக இது அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கும் இது உதவும் என்று கூறப்படுகிறது.
இன்று சென்னையில் பெட்ரொல் விலை லிட்டர் ஒன்றுக்கு 92.59 ரூபாய் என்றும், டீசல் லிட்டர் 85.98 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆட்டோமொபைல்
டெஸ்லாவுக்கு போட்டியா? 2025-ம் ஆண்டு முதல் எலக்ட்ரிக் கார் மட்டுமே.. ஜாகுவார் அதிரடி அறிவிப்பு!


உலகின் ஆடம்பர எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. ஜாகுவா அண்ட் லேண்ட் ரோவர் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஒரு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம்.
உலகம் முழுவதும் இப்போது எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் 2025-ம் ஆண்டுக்குள் 6 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 2030-ம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் கார் விற்பனையில் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த ஜாகுவார் முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜாகுவாரின் இந்த அறிவிப்பால், டெஸ்லா நிறுவனத்தின் ஐரோப்பிய, இந்திய சந்தைகளில் கடும் போட்டி எழும் என்பதில் சந்தேகம் இல்லை.
வணிகம்
உலகின் 1 சதவீத வாகனங்கள் உள்ள இந்தியாவில் 11 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன: உலக வங்கி


இந்தியாவில் உலகின் 1 சதவீத வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது.
உலகின் 1 சதவீத வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்தாலும், உலகளவில் 11 சதவீத விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது என்று அதிர்ச்சி தகவலை உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் 75 சதவீதம் குறைவான வருவாய் உள்ள குடும்பங்களில் யாருக்காவது விபத்து ஏற்பட்டால், அவர்களது குடும்ப வருவாமனம் மேலும் குறைந்துவிடுகிறது என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
-
கிரிக்கெட்2 days ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்
-
கிரிக்கெட்2 days ago
‘ஏன்டா நீ ஆஸி., கேப்டன்டா… இப்டியா பேசுறது’- ஆரோன் பின்சை வறுத்தெடுத்த மைக்கெல் கிளார்க்
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!